TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு 2022 – உடனே பாருங்க !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி |
பணியிடங்கள் | 16 |
தேர்வு தேதி | 19.06.2022 |
Status | Result Released |
TNPSC DCPO தேர்வு முடிவுகள் :
இப்பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு 19.06.2022 அன்று தமிழகம் முழுவதும் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. 16 பணியிடங்களுக்கான தேர்வை பல ஆயிர கணக்கான தேர்வர்கள் எழுதி உள்ளனர். மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பதார்கள் Computer Based Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கான கணினி அடிப்படையிலான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்காலிகமாக 1:4 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சி ஆனவர்கள் பட்டியலை விண்ணப்பதார்கள் கீழே உள்ள நேரடி இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, வாய்மொழித் தேர்வுக்கு அதாவது நேர்காணலுக்கு தகுதியானவர்களின் பட்டியல் 1:3 என்ற விகிதத்தில் வெளியிடப்படும். அறிவிப்பில் உள்ள பதிவு எண்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், தேர்வில் (கணினி அடிப்படையிலான தேர்வு) பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களுக்கான முன்பதிவு விதியின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.