TNPSCயில் ரூ.56,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC காலிப்பணியிடங்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 16
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
பாதுகாப்பு அலுவலர் கல்வி தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தின் சமூகவியல் அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வு செயல் முறை:
- Computer Based Test
- Interview
TNPSC Coaching Center Join Now
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பள விவரங்கள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – ரூ.56,100 – 2,05,700/-
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணைய முகவரி மூலம் 01.04.2022 முதல் 30.04.2022 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.