TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – கலந்தாய்வு தேதி அறிவிப்பு! உடனே பாருங்க!
தமிழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் (15.11.2021) (16.11.2021) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அழைப்பு கடிதத்தை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித் தகுதி அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் டெட் போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற பணிகளை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 17ம் தேதி தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது டிசம்பர் (15.11.2021) (16.11.2021) ஆகிய தேதிகளில் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் கலந்தாய்வு தேதி நேரம் போற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
கலந்தாய்விற்கான அழைப்பு தபால் மூலம் அனுப்பப்படாது. கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு மற்றும் அவரின் விண்ணப்பத்தில் உள்ள தகவல் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.விண்ணப்பதாரர் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.