TNPSC தமிழக கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கூட்டுறவு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை:
தமிழகத்தில் அண்மையில் TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பலவிதமான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் கூட்டுறவுத் துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் – முழு பட்டியல் இதோ!
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.ஏ (கூட்டுறவு) அல்லது எம்.காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 30ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாளும் அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாளும் நடைபெறவுள்ளது. மேலும் தேர்வுகளில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!
ஆன்லைன் மூலம் தகுதியோடையோர் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். மேலும் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள், SC/ST பிரிவினர், விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த தேர்விற்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ஊதியமாக ரூ.56,100 – 1,77,500 வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.