தமிழக அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் – நிதியமைச்சர் இன்று துவக்கி வைப்பு!
தமிழக அரசின் அறிவிப்பின் படி, புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்களுக்கான பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி திட்டத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (நவ.29) சென்னையில் தொடங்கி வைத்திருக்கிறார்.
பயிற்சி திட்டம்
தமிழக அரசுப் பணிகளில் புதிதாக சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்கள் ஆகியோருக்கு பவானிசாகர் பயிற்சி மையத்தில் வைத்து பணி தொடர்புடைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பணியாளர்கள் அவர்கள் மாவட்டத்திலேயே பயிற்சி பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயிற்சித்துறை அதிகாரிகள் சென்று அடிப்படை பயிற்சிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் வெளியீடு! தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
இப்போது ஒவ்வொரு புதிய பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் வரை சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பினை தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், சென்னை அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் வைத்து முதற்கட்டமாக துவக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் கீழ், தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின் படி, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி அந்தந்த மாவட்டத்தில் வைத்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக 17.03.2020 முதல் இந்த பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுமார் 9,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுக்கப்படாமல் தடை ஏற்பட்டிருந்தது.
இப்போது அனைத்து அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, 37 பணி நாட்கள் கொண்ட அடிப்படை பயிற்சியை வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசுப் பணியாளர்களுக்கும் அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரி, பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையங்கள் மூலம் இதுவரை 1,29,813 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!
இப்போது பயிற்சிகளை மாவட்டங்கள் தோறும் வழங்குவதற்கு அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களாகவும், துறை உயர் அலுவலர்களை சிறப்பு விரிவுரையாளர்களாகவும் நியமித்து ஒரு மாவட்டத்தில் குறைந்த பட்சம் 250 பயிற்சியாளருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்போது ஒவ்வொரு ஊழியர்களும் அவரவர் வீடுகளில் இருந்தே பயிற்சிக்கு வருவதால் அவர்கள் தொய்வில்லாமல் பயிற்சி பெற முடியும் என்பது பெண் ஊழியர்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பயிற்சியின் முதல் கட்டமாக சென்னையில் 250 அரசுப் பணி பயிற்சியாளர்களுக்கு இன்று (நவ.29) காலை 10.30 மணியளவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் பயிற்சி வகுப்புகள் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மனித வள மேலாண்மைத்துறை அரசு செயலாளர் திருமதி மைதிலி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி, கல்லூரி முதல்வர் அனிதா ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.