TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது குழந்தை பாதுகாப்புத் துறைக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் பல்வேறு துறைகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து தற்போது குழந்தைகள் பாதுகாப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தரமான அரிசி வழங்க கோரிக்கை!
தற்போது வரை TNPSC யில் அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் நடத்தப்பட்டது. முதல் முறையாக அரசு பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை கணினி வழியில் வருகிற ஜூன் மாதம் 19ம் தேதி காலை அன்று நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இட ஒதுக்கீட்டு பிரிவினராக இருப்பின் நடப்பு ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று நிலவரப்படி 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். அத்துடன் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினராக இருப்பின் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க சமூகவியல், சமூக பணி, உளவியல், குழந்தைகள் மேம்பாடு அல்லது குற்றவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிடத்திற்கு குறைந்தபட்சமாக 56,0100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.05 லட்ச ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்கு ஆன்லைன் முறையில் வருகிற ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற www.tnpsc.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.