TNPSC புதிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்தா? தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பிரச்னை முடியும் வரை, அரசு துறைகளின் புதிய பணி நியமன அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர்கள், பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வன்னியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன் வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜூலை திமுக தலைமையிலான அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டது.
கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.27,500/-
இன்ஜினியரிங், சட்டம் உட்பட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு அளித்து குறித்து உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பிரச்னை முடியும் வரை, அரசு துறைகளின் புதிய பணி நியமன அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இந்த மனு மீது நீதிமன்றம் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலையில் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என்ற நிலை தொடர்கிறது அரசு துறைகளில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டாலும், மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தினாலும், வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.