TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3, 2022 ஆகும். எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசு வேலை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற பணியிடங்களுக்கு தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது மட்டுமில்லாமல் பொறியாளர், குழந்தை பாதுகாப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கும் TNPSC மூலம் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய 626 காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தானியங்கிப் பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) பணியில் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும்.
சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – பொதுமக்கள் கவனத்திற்கு!
இதை தொடர்ந்து இளநிலை மின் ஆய்வாளர் பணியில் 8 காலி இடங்களும், உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பணியில் 66 காலியிடங்களும், உதவி பொறியாளர்(நெடுஞ்சாலைத் துறை) பணியில் 33 காலியிடங்களும், இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) பணியில் 18 காலியிடங்களும், உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) பணியில் 1 காலியிடங்களும், உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) பணியில் 1+ 307 காலியிடங்களும், முதலாள் பணியில் 7 காலியிடங்களும், தொழில்நுட்ப உதவியாளர் பணியில் 11 காலியிடங்களும், உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) பணியில் 93 காலியிடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான மாதசம்பளம் ரூ. 37,700 – 1,38,500 வழங்கப்படும்.
ExamsDaily Mobile App Download
இதை அடுத்து உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியில் 64 காலியிடங்களும், உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) பணியில் 13 காலியிடங்களும் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.37,700 – 1,38,500 வழங்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் வயது 01.07.2022 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி,எம் பி சி, பிசி, அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் வயது வரம்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக் கட்டணமாக ரூ.200 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள், ரூ.150 செலுத்தி அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி 26.06.2022, காலையில் தாள் ஒன்று மற்றும் மதியம் தாள் 2 ஆகிய தேர்வுகள் நடைபெறும்.