TNPSC குரூப் 2 தேர்வெழுத விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏற்பாடுகள் தீவிரம்!

0
TNPSC குரூப் 2 தேர்வெழுத விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு - ஏற்பாடுகள் தீவிரம்!
TNPSC குரூப் 2 தேர்வெழுத விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு - ஏற்பாடுகள் தீவிரம்!
TNPSC குரூப் 2 தேர்வெழுத விண்ணப்பித்தோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் குரூப்-2 தேர்வு நடைபெற இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 105 மையங்களில் 31,859 பேர் தேர்வு எழுதுள்ளனர். தேர்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 முதலிய தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் தகுதி குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 நடைபெற இருக்கிறது. குரூப்-2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. அதே போல் குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியானது. குரூப்-2 தேர்வு வரும் மே 21 அன்று நடைபெற இருக்கிறது. குரூப்-4 தேர்வு ஜூலை 2ம் தேதி நடைபெற இருக்கிறது.

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

இதனையடுத்து குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வின் மூலமாக காலியாக உள்ள 5,529 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு மைனஸ் மதிப்பெண்ணும் வழங்க இருக்கிறார்கள். விடைத்தாளில் என்னென்ன தவறுகள் செய்தால் எவ்வளவு மதிப்பெண் மைனஸ் மதிப்பெண் என்பதற்கான தகவல் வெளியானது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகா என 105 மையங்களில் 31,859 பேர் தேர்வெழுதவுள்ளனர்.

Exams Daily Mobile App Download

நாமக்கல் தாலுகாவில் 15,360 பேரும், ராசிபுரம் தாலுகாவில் 8,576 பேரும், திருச்செங்கோட்டில் 7,923 பேரும் தேர்வெழுதவுள்ளனர். தேர்வாளர்களை கண்காணிப்பதற்காக 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கருவூல அலுவலகங்களில் இருந்து வினாத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக தாசில்தார், துணை தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் என 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய 30 போலீசாரும் இவர்களுடன் செல்ல இருக்கிறார்கள். குரூப்-2 தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்வாளர்கள் யாரும் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!