TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. மேலும் இத்தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 32 வகையான தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு குறித்த கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்குரிய முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் கூறியதாவது, மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வருகிற 9ம் தேதி அன்று மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வருகிற 12 மற்றும் 13ம் தேதியும், பொதுப்பணித் துறையில் இளநிலை வரைவாளர் பணியிடத்திற்கு வருகிற 16ம் தேதி முதல் 18ம் தேதி அன்றும் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். இது சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற  இணையதள முகவரி சென்று அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கு கலந்தாய்வு குறித்த தகவல்கள் SMS அல்லது இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!