TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஜாக்பாட் – தேர்வாணைய தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பு!
TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று கடந்த ஆண்டு TNPSC அறிவித்திருந்தது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC நடத்தும் போட்டி தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய வகைகளில் நடைபெறும். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்வுகள் நடக்கவில்லை.
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
ஆனால் 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கு, மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நடப்பு ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SBI வங்கியில் 48 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ!
TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அது குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ் மொழித் தகுதித் தாள், தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. இந்த நிலையில் TNPSC குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடுகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.