TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தகுதி தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட 2000 முதல் 2018 வரை நடைபெற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தெரிவித்து வந்தனர். அதற்கு TNPSC சார்பில் ஒரு முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
TNPSC முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் பட்டதாரிகள் மிகவும் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
நாட்டில் மே 2ம் தேதி பொது விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு முதல் 2018 வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வுகள் நடைபெற்றது. மேலும் இந்த தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு சட்டவிரோதமாக பணி ஆணை வழங்கியதாக ஏற்கனெவே குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்றும், மேலும் பயிற்சி அடிப்படையில் பணி நியமனம் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, விதிகளை மீறி 8க்கும் மேற்பட்டவர்களை பணிக்கு அழைத்ததும் வெளியே தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலி ஆவணங்களை பயன்படுத்தி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் TNPSC சார்பில் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து உள்ளது. அது என்னவென்றால், இது குறித்து தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதற்கான விசாரணை மேற்கொண்ட ஆணையம், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரிக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் தகவல் ஆணையர் அறிவித்து உள்ளார்.