TNPSC அறிவித்துள்ள இராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை – முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.
மாணவர் சேர்க்கை:
இந்தியாவில் நோய் பரவல் குறைந்து மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தது. மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதே போல் கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தன.
கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஜப்பான் அனுமதி – பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்!
இந்த நிலையில், நாட்டில் படிப்படியாக பழைய நிலை திரும்பி வருவதால் மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சாராத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் (சிறுவர்கள், சிறுமிகள்) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள (www.tnpsc.gov.in ) என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.