TNPSC குரூப் 2 & 2A வினாக்கள் எப்படி இருந்தது? ஏராளமானோர் ஆப்சென்ட்! தேர்வர்களின் ரிப்போர்ட்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வானது எவ்வாறு இருந்தது என்பது குறித்தான தேர்வர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்ட்டுள்ளனர். மேலும், மதுரை மாவட்டத்தில் தேர்வர்களின் வருகை குறித்தும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2&2A தேர்வு:
தமிழக அரசின் துறைகளில் பணியாற்றுவதற்கு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தற்போது தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது நடப்பு ஆண்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக அதிகமாக 5,538 காலியிடங்கள் உள்ள குரூப் 2 நிலை தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது.
தமிழக அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவியில் காலிப்பணியிடங்கள் – செப்.10ல் தேர்வு!
மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை திட்டமிட்டபடி 9:30 மணிக்கு தேர்வு தொடங்கி 12:30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வில் வினாக்கள் எவ்வாறு இருந்தது என்று தேர்வர்களிடம் கேட்கப்பட்ட போது, பொது ஆங்கிலம் பகுதி மிகவும் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் அதிக அளவு நடப்பு நிகழ்வுகள் தான் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
மொத்தத்தில் தேர்வு எளிமையாக இருந்ததாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர மதுரையில் மொத்தம் 55,000க்கும் மேற்பட்டவர்கள் 202 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி உள்ளனர். 86% பேர் தேர்வில் கலந்து கொண்டுள்ளதாகவும், 64,082 பேர் விண்ணப்பித்த நிலையில் மொத்தம் 8,000 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.