TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பதவி மற்றும் தேர்வு குறித்த விபரங்கள்!
தமிழகத்தில் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான பதவிகள் மற்றும் தேர்வு முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
TNPSC குரூப் 2 & 2A:
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் குறித்த கால அட்டவணை TNPSC தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். அவ்வாறு வெளியிடப்பட்ட 2020 தேர்வு கால அட்டவணைப்படி குரூப் 4 மற்றும் குரூப் 2, 2A தேர்வுகள் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தேர்வுகளுக்கு தயாராவோர் அனைவரும் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த TNPSC தேர்வு வாரிய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதமும், குரூப் 2,2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதமும் நடைபெறும் என்று தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் குரூப் 2A தேர்வுக்கு 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வு:
இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
குரூப் 2A தேர்வு:
இந்த பணிக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. நேர்முகத்தேர்வு இல்லை.
Best TNPSC Coaching Center – Join Now
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்துள்ள அனைவரும் குரூப் 2 தேர்வு எழுதலாம்.
பதவிகள்:
இந்த தேர்வின் மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன.