TNPL தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் வேலைவாய்ப்பு 2022 – ஊதியம்: ரூ.2,88,049/-
General Manager, Company Secretary பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TNPL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி General Manager, Deputy General Manager, Company Secretary பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General Manager – 1 பணியிடங்கள்
- Deputy General Manager – 1 பணியிடங்கள்
- Company Secretary – 1 பணியிடங்கள்
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, CA/ CMA, Engineering/ MCA/ M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPL வயது வரம்பு:
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- General Manager/ Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதானது 46 என்றும் அதிகபட்ச வயதானது 57 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயதானது 43 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஊதிய விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General Manager/ Deputy General Manager (IT) – ரூ. 2,54,938/- முதல் ரூ.2,88,049/-
Deputy General Manager (Finance) – ரூ. 2,62,391/-
Company Secretary – ரூ. 2,27,795/-
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
தேர்வு செய்யப்படும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.