தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கல்வி நிலையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து உயர்கல்விகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இருந்து தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள பாடப்பிரிவில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200/- மற்றும் பழங்குடி மாணவர்கள் ரூ. 100/- செலுத்த வேண்டும்.
முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது அதுவும் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |