ரூ.50,400/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
ரூ.50,400/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ரூ.50,400/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ரூ.50,400/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்‌, தூர்வை ஆகிய பணிகளுக்கு என திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, ஸ்ரீரங்கம்‌ வட்டம்‌, ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 146 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (17.10.2022) முடிய உள்ளதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் காவலர்கள்‌ பணிக்கு என 39 பணியிடங்களும், துப்புரவு பணியாளர்கள் பணிக்கு என 66 பணியிடங்களும், காவலர்‌ பணிக்கு என 21 பணியிடங்களும், தூர்வை பணிக்கு என 20 பணியிடங்களும் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களின் விண்ணப்பங்களும், இந்து மதத்தைச்‌ சேர்ந்த இறை நம்பிக்கை உடையவர்களின் விண்ணப்பங்களும் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம். இந்த இந்து சமய அறநிலைய துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,400/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

Exams Daily Mobile App Download

இந்துசமய அறநிலைய துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் https://srirangamranganathar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பங்கள் 17.10.222 அன்று வரை மட்டுமே பெறப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!