சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – எழுத, படிக்க தெரிந்தால் போதும்!!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து சென்னையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker உட்பட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu |
பணியிடங்கள் | 09 |
கடைசி தேதி | 20.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Typist, Archakar, Watchman, Oduvar , Animal Caretaker, Menom Set, Thiruvalagu ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
01.07.2021 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
- Typist – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Typing Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Archakar (Priest) – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வேத பாடசாலையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Parisarakar – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பூஜை பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
- Menom Set – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Watchman, Night Watchman, Thiruvalagu, Animal Caretaker – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- Oduvar – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தோர் வரும் 20.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.