தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சென்னையின் திருவேற்காடு பகுதியில் செயல்படும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் |
பணியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 22.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர் மற்றும் கடை நிலை ஊழியர் மற்றும் பல பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
- இளநிலை உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்
- டிரைவர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.
- ஜாடுமாலி, தோட்டி, முடிகொட்டகை மேஸ்திரி, இரவு காவலர் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.
- உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- குழாய் பராமரிப்பாளர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒத்து & தாளம் – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
TNHRCE விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.