இந்து சமய அறநிலையத் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்:15,000/-
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE பழனி) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Pharmacist (Siddha) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE பழனி) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் கல்லூரி பல்கலைக்கழகங்களில் சித்தா மருத்துவம் துறையில் மருந்தியல் பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் பணிபுரியும் போது மாதம் தோறும் ரூ.15,000/- சம்பளமாக பெறுவார்கள்.
- மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.