இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE பழனி) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள சித்த மருந்தாளுனர் (Pharmacist (Siddha)) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE Palani) |
பணியின் பெயர் | Pharmacist (Siddha) |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணியிடங்கள்:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE பழனி) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் கல்லூரி பல்கலைக்கழகங்களில் சித்தா மருத்துவம் துறையில் மருந்தியல் பிரிவில் பட்டய படிப்பு முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TN Job “FB Group” Join Now
மருந்தாளுனர் வயது வரம்பு:
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
மருந்தாளுனர் சம்பளம்:
இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் பணிபுரியும் போது மாதம் தோறும் ரூ.15,000/- சம்பளமாக பெறுவார்கள்.
மருந்தாளுனர் தேர்வு செய்யும் விதம்:
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Apprentices பணிக்கு 200+ காலிப்பணியிடங்கள் – ரூ.9,000/- ஊக்கத்தொகை..!
மருந்தாளுனர் விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 08.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624601,
திண்டுக்கல் மாவட்டம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்