ரூ.62,000/- ஊதியத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை – 86 காலிப்பணியிடங்கள்…!
காஞ்சிபுரம், ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. இதில் காலியாக உள்ள Office Assistant, Night Watchman, Driver பதவிக்கு என மொத்தமாக 86 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள Office Assistant, Driver, Night Watchman ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 86 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Office Assistant, Night Watchman, Driver பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வர்மப்பில் வளங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் தரப்படும். அதேபோல் Driver பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.
இப்பணிகளுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.