TNHRCE 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
மதுரை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Medical Officer, Nurse, MPHW ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (06.07.2022) இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மதுரை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள Medical Officer, Nurse, MPHW ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கு MD அல்லது MBBS Degree பெற்றவர்கள், செவிலியர் (Nurse) பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker) பணிக்கு 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த இந்து சமய அறநிலையத் துறை பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
இந்த TNHRCE பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (06.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.