தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – சம்பளம்: ரூ.58,600/- வரை!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Madurai) கீழ் இயங்கி வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள Plumber, Cook, Office Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Madurai) |
பணியின் பெயர் | Plumber, Cook, Office Assistant and Others |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தாளம், வேதபாராயணம், உப கோயில் ஓதுவார், உதவி பரிசாரகர், உதவி யானைப் பாகன், கருணை இல்லக் காப்பாளர், கால்நடை பராமரிப்புத் தொழிலாளர், தொழில்நுட்ப உதவியாளர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டர், பிளம்பர், சமையல்காரர், உதவி சமையல்காரர், சுத்தம் செய்பவர் ஆகிய பணிகளுக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் சான்றிதழ் பெற்றவராக, பட்டம் பெற்றவராக மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TNHRCE Madurai வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
TNHRCE Madurai விண்ணப்ப கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Best TNPSC Coaching Center – Join Now
TNHRCE Madurai தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNHRCE Madurai விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். 18.08.2022 அன்றைய நாள் வரை மட்டுமே விண்ணப்பங்கள் அலுவலகத்தில் வழங்கப்படும்.