ரூ.62000/- சம்பளத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை !
ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க 15.04.2022 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த அரசு பணிக்கு 01-07-2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. LMV License with Batch. நல்ல உடல் தகுதி உடன் இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இரவு காவலர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஓட்டுநர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500 – 62000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பதவிக்கு ரூ15700 – 50000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் tnhrce.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.04.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.