தமிழக அரசில் ரூ.58 ஆயிர ஊதியத்தில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Assistant, Typist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை |
பணியின் பெயர் | Junior Assistant, Typist & Various |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Assistant, Typist பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Coaching Center Join Now
TNHRCE கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி சுயம்பாகம் மற்றும் டிக்கெட் பஞ்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
- உதவி சுயம்பாகம் – ரூ.10,000/- முதல் ரூ.31,500/- வரை
- Junior Assistant, Typist – ரூ.18,500/- முதல் ரூ.58,600/-வரை
- டிக்கெட் பஞ்சர் – ரூ.11,600/- முதல் ரூ.36,800/- வரை
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.