சிவகங்கை கோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – தமிழ் தெரிந்தால் போதுமானது !!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பில் அர்ச்சகர், டிரைவர், ஜாடுடுமாலி & தோட்டி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Driver, Archagar, Jadumali & Thothi |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 13.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
அர்ச்சகர், டிரைவர், ஜாடுமாலி & தோட்டி இப்பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE வயது வரம்பு :
01.07.2020 கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
- அர்ச்சகர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி
- டிரைவர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.
- ஜாடுமாலி, தோட்டி – நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.6,900/- முதல் அதிகபட்சம் ரூ.11,600/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் 12.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.