TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,700/-
சென்னையில் உள்ள தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய துறையில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.11.2022 அல்லது அதற்கு முன் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய துறை |
பணியின் பெயர் | கணினி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர் |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE சென்னை காலிப்பணியிடங்கள்:
- கணினி ஆபரேட்டர் – 1 பணியிடம்
- மின் பணியாளர் – 1 பணியிடம்
- அர்ச்சகர் நிலை 2 – 1 பணியிடம்
- ஓதுவார் – 1 பணியிடம்
- சுயம்பாகி – 1 பணியிடம்
- மேளக்குழு – 1 பணியிடம்
- பகல் காவலர் – 1 பணியிடம்
- இரவு காவலர் – 1 பணியிடம்
- துப்பரவாளர் – 1 பணியிடம்
TNHRCE கல்வி தகுதி:
கணினி ஆபரேட்டர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மின் பணியாளர்: அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அர்ச்சகர் நிலை 2: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு அடிப்படை நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஒராண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அடிப்படை அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாரப்பாடசாலையில் இதன் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
சுயம்பாகி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மற்றும் திருக்கோயில்களில் பூஜை மற்றும் சடங்குகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
மேளக்குழு: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம் அல்லது பல்கலைகழக மாணியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.5,35,000/- ஊதியத்தில் PFRDA நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பகல் காவலர்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
இரவு காவலர்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
துப்பரவாளர்: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
TNHRCE சென்னை சம்பள விவரம்:
- கணினி ஆபரேட்டர் – ரூ. 15,300 – 48,700/-
- மின் பணியாளர் – ரூ.12,600 – 39,900/-
- அர்ச்சகர் நிலை 2 – ரூ.13,200 – 41,800/-
- ஓதுவார் – ரூ.12,600 – 39,900/-
- சுயம்பாகி – ரூ.13,200 – 41,800/-
- மேளக்குழு – ரூ.15,300 – 48,700/-
- பகல் காவலர் – ரூ.11,600 – 36,800/-
- இரவு காவலர் – ரூ.11,600 – 36,800/-
- துப்பரவாளர் – ரூ.10,000 – 31,500/-
வயது வரம்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 17-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.