தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் பணியிடங்கள், தகுதி பற்றிய முழு விவரங்களை காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான முழு பட்டியல் இதோ!

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் காவலர், துப்புரவு பணியாளர், கால்நடை பராமரிப்பு, திருமஞ்சனம், வழக்கு எழுத்தர், சீட்டு விற்பனை எழுத்தர், உதவி யானைப்பாகன் ஆகிய பதவிகளில் மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமஞ்சனம் பணிக்கு விண்ணப்பிப்பவர் வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும். அதே போல உதவி யானைப் பாகன் பணிக்கு யானை வளர்க்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேற்கண்ட தகுதியுடையோர் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் இணைத்து உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரர் சுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010 என்ற முகவரிக்கு ஜூன் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!