தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி காஞ்சிபுரம் : 15.04.2022, திண்டுக்கல் : 22.04.2022 ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு:
இந்து சமய திருக்கோயிலின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் இணை ஆணையர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும். பணியிடம் காஞ்சிபுரம் ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாத சம்பளமாக ரூ. 15,700 – 50,000 வழங்கப்படும். இந்த வகையில் ஓட்டுநர் (Staff Driver) பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை (காஞ்சிபுரம் – 1, திண்டுக்கல் – 1) 2 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ. 19,500 – 62,000 வழங்கப்படும். இதை தொடர்ந்து இரவுக் காவலர் (Night Watchman) காலியிடங்களின் எண்ணிக்கை (காஞ்சிபுரம் – 1, திண்டுக்கல் – 1) 2 ஆகும். விண்ணப்பதாரர் கல்வித் தகுதி, 8 ஆம் வகுப்பு தேர்ச்சியின்மை. அதாவது 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 15,700 – 50,000 ஆகும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் வயதுத் தகுதி, 01.07.2021 அன்று 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf என்ற இணையதளப் பக்கங்களில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 20/நெ.11 ஏ.கே.தங்கவேலர் தெரு, காஞ்சிபுரம் – 631501 மற்றும் இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, பிளாட் எண் – 49, M.R.S. நகர், சீலப்பாடி அஞ்சல், திண்டுக்கல் – 624005.என்ற முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.