தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு – 2,400 காலிப்பணியிடங்கள்! தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்தது. அதனால் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் கொண்டு நிரப்பப்படுகிறது. இதில் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து தற்போது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடரும் – திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!
தமிழகத்தில் மின் வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் 600 உதவிப் பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 1300 கணக்கீட்டாளர் என மொத்தமாக 2400 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு பொதுப் பிரிவினருக்கு ரூ.1000 தேர்வு கட்டணமாகவும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இத்தேர்வை வாரியம் தள்ளி வைத்தது. இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் மே மாதம் நடத்த முடிவு செய்தது.
ஆனால் அப்போது நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதனால் இன்னும் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. தற்போது மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு TNPSC மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு TNPSC மூலமாக நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களும் இந்த தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.