தமிழகத்தில் புதிய மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூல் – அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் புதிய மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூல் - அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் புதிய மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூல் - அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் புதிய மின் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூல் – அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மின் இணைப்புகளுக்கு டெபாசிட் கூடுதலாக வசூலிக்க கூடாது என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.

மின்கட்டண டெபாசிட்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முழு ஊரடங்கு மே 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மின் கட்டணம் செலுத்த மே 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில்,

TN Job “FB  Group” Join Now

“மின்கட்டணம் செலுத்த தேவையான அவகாசத்தை முதல்வர் வழங்கியுள்ளார். தற்போது இரண்டு மாதத்திற்கான கணக்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு வரக்கூடாது என்பதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக இணைப்புகள் வாங்குவோருக்கு டெபாசிட் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான 2 DG தடுப்பு மருந்து – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இணைப்புகளுக்கு டெபாசிட் வசூலிக்க கூடாது என அனைத்து அலுவலகங்களுக்கும் கடந்த 30 ஆம் தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி எந்த இடத்திலும் டெபாசிட் வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி டெபாசிட் வசூலிக்கப்படுபவர்கள் மீது புகார் தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!