தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய உத்தரவு!
ஒப்பந்த ஊழியர்களாக இருந்து பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மின்வாரியம்
தமிழகத்தில் உள்ள மின்வாரிய கழகம் பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பணிகளை வழங்கி வருகின்றது. இதில் ஒப்பந்த ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்வாரிய பொறியாளர்களுக்கு அறிக்கை ஒன்றினை வழங்கியுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் ரூ.4000, மளிகை பொருட்களை வாங்காதவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!
அந்த அறிக்கையில், மின்வாரியத்தில் பணியாளர்களாக சேர்ந்த நாளில் இருந்து பணி மேற்கொண்டதன் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றது. ஆனால், தமிழகத்தில் உள்ள சில மின்பகிர்மான வட்டங்களில் கோட்டம் வாரியாக தான் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுகின்றது. இதனை முதன்மை வரிசைப் பட்டியல் என்று கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து, இந்த பட்டியல் முறையாக தயாரிக்கப்படுகின்றதா? எவ்வாறாக தயாரிக்கப்படுகின்றது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தந்த மின்பகிர்மான பொறியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்து தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களின் முழு விவரம் கொண்ட பட்டியலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.