அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் – ஐகோர்ட் கிளை உத்தரவு !

0
அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் - ஐகோர்ட் கிளை உத்தரவு !
அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் - ஐகோர்ட் கிளை உத்தரவு !

அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் – ஐகோர்ட் கிளை உத்தரவு !

தமிழக மின்வாரியத்தில் பணியில் சேருவதற்கு டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் இல்லையெனில் பணியில் நீடிக்க முடியாது என்றும் தமிழக ஐகோர்ட் கிளை தற்போது ஒரு உத்தரவினை வெளியிட்டு உள்ளது.

தமிழ்மொழி :

தமிழகத்தில் அலுவலக மொழியாக தமிழ் மொழி உள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவல்களும் தமிழிலேயே நடைபெறுகிறது. இதனால் அரசு பணியில் சேருவோருக்கும் தமிழ் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழில் எழுதவும் படிக்கவும் செய்தல் வேண்டும்.

high court

மின் வாரிய பணி !

தமிழக மின் பகிர்மான கழகத்தில் தமிழ் மொழியே அலுவலக மொழியாக உள்ளதால் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பணியில் இருப்போர் தமிழ் வழியில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தமிழ் தேர்வில் கலந்து தேர்ச்சி பெற்றுவிட்டு அதன் பிறகு பணியில் நீடிக்கலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

பெரியகுளத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சின்னமனூர் மின் வாரியத்தில் 2018 ஆம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவர் தமிழில் வழியில் தேர்ச்சி பெறவில்லை என்பதனால் அவர் மீண்டும் தமிழ் தேர்வு எழுதி அதன் பிறகு பணியில் நீடிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மின் வாரிய கழக விதிமுறைகள் படி தமிழ் வழியில் தேர்ச்சி பெறவில்லை என்பதனால் மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டு உள்ளது. மேலும் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவித்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!