10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசின் மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு – உடனடியாக விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் மின்வாரியத்தில் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம்.
TNEB வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படை கல்வி தகுதி கொண்டவர்கள் கொண்டவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மின்வாரியத்தில் மாவட்டத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் வரைவாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் 10 கிலோ இலவச உணவு தானியங்கள்!
எலக்ட்ரீசியன் பணிக்கு 1 காலியிடமும், இதற்கு தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.6000 முதல் ரூ.8050 வரை ஊக்கதொகையாக வழங்கப்படும். பணிக்கு 23 மாத பயிற்சி காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவாளர் பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளதாகவும், இதற்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ரூ ரூ.6000 – 8050 வரை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். இந்த பணிக்கு 25 மாதம் பயிற்சி காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
மின்சார வாரியத்தின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மேலும் அதிகமான தகவல்களை அதிகாரபூர்வ இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், பணிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 28ம் தேதியாகும். இதற்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.