தமிழக மின் நுகர்வோர் கவனத்திற்கு – இணைய வழியில் புகார்கள்! புதிய திட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் தொடர்பான புகார்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின் புகார்:
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் மின்சார துறையின் கீழ் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதனால் மின்துறையை புத்தாக்கம் செய்ய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி, தலைமையில் தினமும் பிரிவு வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
அந்த கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்துறையில் நிகழ்ந்த அனைத்து செயல்பாடுகளும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10,000 மின்னூட்டிகள், 3.60 லட்சம் மின் மாற்றிகள், மற்றும் 2.88 கோடி மின் நுகர்வோரின் புவியியல் தகவல்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் கணினி சார்ந்த புவியியல் தகவல் அமைப்பில் பதியப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – தேசிய அளவில் மூவர் முதலிடம்!
இந்த புதிய திட்டத்தின் மூலம் மக்கள் TANGEDCO இணையதளம் வாயிலாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மின் உற்பத்தி தகவல்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்பவர்கள் தங்களது இருப்பிடத்தை கணினியில் வரைந்து காண்பிக்குமாறு செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்தடை மற்றும் மின் இழப்புகளை கண்டறியும் விதமாக ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றிகளில் சிறப்பு மின் அளவி பொருத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.