பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்ஆனது வரும் 25ம் தேதி வெளியிடப்படும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்து உள்ளார். மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கை :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முதற் கொண்டு ஆன்லைனிலேயே நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கும் பணிகளும் முடிவடைந்து விட்ட காரணத்தினால் செப்.17 (இன்று) இன்ஜினியரிங் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சான்றிதழ்களை பதிவேற்ற மேலும் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தால் வரும் 25ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து உள்ளார்.
மாணவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதை www.tneaonline.org என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். தற்போது தேய் வெளியாகி விட்டதனால் மாணவர்களின் தரவரிசை பட்டியலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்