பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து!
தமிழகத்தின் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை ஆனது முன்னதாக வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது அந்த அறிவிப்பினை ரத்து செய்வதாக பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் :
தமிழகத்தில் சட்டக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாட பிரிவுகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அப்பல்கலைக்கழகம் சார்பில் பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
அனல் தற்போது அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்வதாக அம்பேத்கர் பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் ஒரு செய்தி குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அறிவிப்பாணையை ரத்து செய்து பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மீண்டும் அறிவிப்பு வெளியாவது குறித்தோ அல்லது அந்த பணியிடங்களை நிரப்புவது குறித்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பித்தோர் தற்போது வெளியாகியுள்ள அறிவுறுத்தலின் படி தங்களின் விண்ணப்பக் கட்டணங்களை திரும்ப பெற்று கொள்ளலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்