TNCSC தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களை நிரப்ப திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு B.Sc in Biology, Zoology, Chemistry, பருவகால உதவுபவர் பதவிக்கு +2 தேர்ச்சி மற்றும் பருவகால காவலர் பதவிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
- தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் திருவண்ணாமலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC/ BC (M)/ MBC விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் SC/ SC (A)/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. ரூ.52854 + 3499 அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் (பருவகால காவலர் பணி தவிர) உரிய கல்விச்சான்று, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வயது உறுதிச்சான்று, ஆதார் அட்டை, முன்னாள் ராணுவ வீரராக இருப்பின் அதற்கான சான்று, 50% மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர் தரும் தகவல்கள் அனைத்தும் அசல் ஆவணங்களின்படி அமைய வேண்டும். மேலும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் நகல்களின் ஒவ்வொரு பக்கமும் தாங்கள் சான்றொப்பமிடவேண்டும். மேலும் விண்ணப்பங்கள் மண்டல அலுவலகத்தில் சேர வேண்டிய நாள்: 25.07.2022 மாலை 05.00 மணிக்குள் வந்து சேர வேண்டும். பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக நேர்காணலை தள்ளி வைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ மண்டல மேலாளர் அதிகாரத்திற்கு உட்பட்டது.