தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணியின் பெயர் | பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் |
பணியிடங்கள் | 98 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – 36
- உதவியாளர் – 31
- காவலர் – 31
வயது வரம்பு:
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 01.07.2021 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
கல்வி தகுதி:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany/Zoology/Chemistry/Physics/Maths/Biochemistry) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
- உதவியாளர் – 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- காவலர் – 10ஆம் வகுப்பு தவறியவர்கள்\ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
கல்வி தகுதி அடிப்படையில் தகுதியுடையவர்களுக்கு நேர்காணல் நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மாத ஊதியம்:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + DA Rs.4,049/-
- உதவியாளர் – ரூ.2,359 + DA Rs.4,049/-
- காவலர் – ரூ.2,359 + DA Rs.4,049/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 22.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், 46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் – 602 001, விண்ணப்ப படிவம் மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.