தமிழக அரசில் 178 காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான வாய்ப்பு..!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 178 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பருவகால உதவுபவர் பணிக்கு விண்ணப்பிப்போர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பருவகால காவலர் பணிக்கு விண்ணப்பிப்போர் அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
TNCSC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- பருவகால உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
- பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.