தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.65,000/-
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டம் 2022-24 (TNCMFP) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில், Tamil Nadu Chief Minister’s Fellowship Programme 2022-24 (TNCMFP) பணிக்கு என்று மொத்தமாக 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science பாடப்பிரிவில் Bachelor’s degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Masters degree முடித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
- விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்ச வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இதில் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதும், BC / MBC விண்ணப்பதாரர்களுக்கு 33 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.65,000/- பெறுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் கூடுதல் தொகையாக மாதம் ரூ.10,000/- பெறுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Preliminary Assessment (Computer-based Test), Comprehensive Examination (Written Examination) மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.