வேளாண் பல்கலைக்கும் அரியர் தேர்வுகள் ரத்து செல்லுமா ??
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இறுதி ஆண்டு தேர்வு மட்டும் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது மாணவர்களுக்கு அக மதிப்பீடு மற்றும் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலும் அனைத்து தேர்வுகளிலும் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு ஆனது வேளாண் பல்கலைக்கழகத்திற்கு பொருந்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1 பல்கலைக்கழகம், 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளிலும் அரியர் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகுமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தீர்மானிக்க தனியாக ஒரு துணை வேந்தர் நியமிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதன் பேரில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கலாம் என்றும், அதிக மதிப்பெண் தேவைப்பட்டால் தேர்வுகள் எழுதலாம் என்றும் அறிவித்து இருந்தார். இருப்பினும் அரசிடம் இருந்துஅறிவிப்பு காத்திருப்பதாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்