தமிழ்நாடு நீர்வளத்துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1 லட்சம்!!
தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement, Environmental, Social மற்றும் Financial Specialist பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2021 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நீர்வளத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Procurement Specialist – 1, Environmental Specialist – 1, Social Specialist – 1, Financial Specialist – 1 தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- தமிழ்நாடு நீர்வளத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 10 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி:
- Procurement Specialist – B.E.Civil,with MBA.(General), or ME.,
- Environmental Specialist – BE/ B.Tech, MBA, ME/ M.Tech, M.Sc
- Social Specialist – MSW/ MA, M.Phil
- Financial Specialist – CA/ ICWA, MBA, M.Com
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் 30-நவம்பர்-2021 அன்று அல்லது அதற்கு முன், கண்காணிப்புப் பொறியாளர், நீர்வளத் துறை, கீழ் காவிரிப் படுகை, சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவூர் – 613001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.