தமிழகத்தில் எந்தெந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்ல தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் திமுக கட்சி சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை அந்த அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் குடும்பத் தலைவி போட்டோ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியானது.
SBI வங்கியில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – செப்டம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்!
ஆனால் அது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால் பலர் தங்களது குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர்கள் பெயரை மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும் என தகவல் பரவி வருகிறது. இதனால் அனைவருக்கும் சமமான முறையில் நிதியுதவி வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
நிதிநிலை அறிக்கைகள் மீது இன்று தொடங்கிய விவாதம் வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தை முதல்வர் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.