தமிழகத்தில் 5 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வானிலை மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
28.06.2021: கடலோர மாவட்டங்கள், சென்னை, காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
TN Job “FB Group” Join Now
29.06.2021 & 30.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.07.2021: நீலகிரி, தேனீ, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரு சில இடஙக்ளில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மழைப்பதிவு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடுவட்டம், ஏற்காடு, ஜெயம்கொண்டான், சேலம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திண்டுக்கல், சிவகங்கை, திருப்பத்தூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
27.06.2021 & 28.06.2021: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.
29.06.2021 & 01.07.2021: தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு அந்த நாட்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.