தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அறிக்கை தகவல்!!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
Follow our Twitter Page for More Latest News Updates
அதனை தொடர்ந்து ஜன.30, 31 மற்றும் பிப். 1ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இந்தியாவில் 3 மாநில சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் – தேர்தல் ஆணையம் வெளியீடு!!
வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநீலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் பிப். 01 ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.