வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை தகவல்!!
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஜன. 27. 28) வறண்ட வானிலை நிலவும். தற்போது வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடதமிழக கடலோர மாவட்டம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் ஜன. 31ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க மேல்முறையீடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநீலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
ஜன. 27.28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.