வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் இன்று (ஜன. 25) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஜன. 28 , 29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுவை பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தொழில் முனைவோராக ரூ.5 கோடி வரை கடனுதவி – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!!
ஜன. 26, 27ம் தேதிகளில் வறண்ட வானிலையே நிலவ கூடும். அதன் பிறகு ஜன. 27 அன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதனை தொடர்ந்து ஜன. 25, 26, 27, 28, 29ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். அதனால் இத்தகைய நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.